திருவொற்றியூர்: மணலியில் 23 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஆர்ஐ அலுவலகம், 10 மாதங்களாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. திருவொற்றியூர் தாலுகாவுக்கு உட்பட்ட மணலி வருவாய்த்துறை ஆய்வாளருக்கு தனியாக அலுவலகம் இல்லை. இதனால் பொதுமக்கள் வாரிசு சான்று மற்றும் பட்டா சம்பந்தமாக சந்தேகங்களை தீர்க்க ஆய்வாளரை போன் மூலம் தொடர்பு கொண்டு, அவர் எங்கே இருக்கிறார் என்று அறிந்து, அந்த இடத்திற்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. இதையடுத்து பொதுப்பணித்துறை மணலி மண்டலம் ஜாகீர்உசேன் தெருவில் 23 லட்சம் செலவில் வருவாய் துறை ஆய்வாளர் அலுவலகம் கட்டும் பணி தொடங்கப்பட்டு, கடந்த 10 மாதங்களுக்கு முன் பணி நிறைவு பெற்றது.