புழல்: வேலையில் இருந்து நீக்கப்பட்டதால் விரக்தியடைந்த மாநகராட்சி ஊழியர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். புழல், புனித அந்தோணியார் நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் ஜானி தென்னரசு (34). இவர், சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 25வது வார்டு கதிர்வேடு பகுதியில் சுகாதாரத்துறை மலேரியா பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன், ஒப்பந்த நிறுவனம் இவரை வேலையில் இருந்து நிறுத்தி விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஜானி தென்னரசு, வீட்டில் யாரிடமும் சரிவர பேசாமல், மனமுடைந்து காணப்பட்டுள்ளார். மேலும், திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டதால் வருவாய் இன்றியும், வேறு வேலை கிடைக்காமலும் தவித்து வந்துள்ளார்.