ராஞ்சி: நடிகர் விஜய் படத்தில் நடித்த நடிகை அமீஷா பட்டேலுக்கு எதிரான செக் மோசடி வழக்கில் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல். இவர் நடிகர் விஜய்யின் ‘புதிய கீதை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பல்வேறு இந்தி படங்களிலும் நடித்துள்ளார். மேலும், இந்தியில் பிக்பாஸ்-13ல் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், அமீஷாவுக்கு எதிரான செக் மோசடி வழக்கில் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அஜய்குமார் சிங் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடிகை அமீஷா படேல் மற்றும் அவரது தொழில்முறை கூட்டாளியான குணால் என்பவருடன் சேர்ந்து படம் தயாரிப்பதற்காக ரூ.2.5 கோடியை என்னிடம் இருந்து வாங்கி இருந்தனர். 2018ம் ஆண்டு படம் வெளியிடப்பட்ட பின்னர் பணத்தை எனக்கு திருப்பி தருவதாக உறுதியளித்தனர். ஆனால், படம் ரிலீஸ் ஆகவில்லை. பணத்தை வாங்குவதற்காக அமீஷாவை அணுகியபோது, அவர் ரூ.3 கோடிக்கான செக்கை கொடுத்தார்.