புதுடெல்லி: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த மாதத்தின் முதல் 2 வாரங்களிலேயே இந்திய பங்குச்சந்தையில் இருந்து 6,217 கோடி முதலீட்டை வாபஸ் பெற்றுள்ளனர். இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளிலும், கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்து வருகின்றனர். பொருளாதார மந்தநிலை, பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை போன்ற காரணங்களால் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் பெரும்பான்மை முதலீடுகளை வாபஸ் பெற்றனர். குறிப்பாக, மத்திய அரசு வரி சீரமைப்புகளை அறிவித்த பிறகு, கடந்த மாதத்தில் அதிக முதலீடுகள் வெளியேற்றப்பட்டன.