மகாராஷ்டிரா: 288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கும், 90 உறுப்பினர்களை கொண்ட அரியானா சட்டசபைக்கும் வருகிற 21-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 24-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதன் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி மஹாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, ஜல்கான் என்ற இடத்தில் வாக்கு சேகரித்த அவர்; காஷ்மீருக்கான சிறப்பு சட்டம் நீக்கப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் மொழியில் பேசுவதாக குற்றம் சாட்டினார். சர்வதேச அளவில் இந்தியாவுக்கு மிகப்பெரிய இடம் கிடைத்துள்ளது.