மும்பை: உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 10வது சுற்று ஆட்டத்தில், 18 வயதுக் குட்பட்டோருக்கான பிரிவில் கிராண்ட்மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்யானந்தா (வயது 14), லிதுவேனியாவின் பாவ்லிஸ் பல்டினிவிசியசை எதிர்கொண்டார். இதில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்யானந்தா 63வது காய் நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதனால் மொத்தம் 8.5 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை நெருங்கினார். அடுத்த இடத்தில் ஆர்மேனியா வீரர் ஷந்த் சர்க்ஸ்யான் (8 புள்ளி) இருந்துள்ளார். இதனிடையே இன்று 11வது மற்றும் கடைசி சுற்று ஆட்டம் நடந்தது.