சென்னை,: தி.நகரில் நேற்று கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் ஒருவர், கடைக்கு வந்த நபரின் பைக்குள் கைவிட்டு, செல்போன், பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார். அவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
* கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் 1வது பிளாக்கை சேர்ந்தவர் செல்வி (40). இவரது கணவன் பல ஆண்டுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். ஒரு மகள், 2 மகன்களுடன் தனியாக வசித்து வந்த செல்வி, கடன் தொல்லை காரணமாக நேற்று முன்தினம் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். படுகாயமடைந்த அவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.