சென்னை: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் ஒரு படகிலும், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் ஒரு படகிலும் இரண்டு நாட்களுக்கு முன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டனர்.