சென்னை: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி மையம் உள்ளது. இதன் வழியாக நாள்தோறும் ஆந்திரா, டெல்லி, பீகார், அரியானா உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டில் சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் ஏராளமான சரக்கு வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வாகனங்களில் செம்மரக் கட்டைகள் கடத்தப்படுவதாக நேற்று முன்தினம் திருவள்ளூர் - காஞ்சிபுரம் போதைபொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபாகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து எஸ்ஐ செல்வம் மற்றும் 6 பேர் கொண்ட குழு எளாவூர் சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் நள்ளிரவு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.