இங்கிலாந்தில் ஷாப்பிங் சென்டரில் சரமாரி கத்திக்குத்து 5 பேர் காயம்

லண்டன்:  இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் பிரபலமான அர்ன்டேல் ஷாப்பிங் மையம் உள்ளது. மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும் இந்த ஷாப்பிங் மையத்தில், 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நேற்று திடீரென அங்கு  இருந்தவர்களை கத்தியால் சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.  தாக்குதல் நடத்திய ஆசாமியை கைது செய்த போலீசார், இந்த தாக்குதலுக்கு பின்னணியில் தீவிரவாதம் உள்ளதா என  அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: