விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.17.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோழிப்பண்ணை பேருந்து நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் காரில் எடுத்துச் சென்ற பணம் பிடிப்பட்டது. ரூ.17.80 லட்சம் பணத்தை எடுத்துச் சென்ற திருச்சியை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.