மதுரை: தமிழ் ஓலைச்சுவடிகளை நவீன டிஜிட்டல் முறையில் பாதுகாக்க ஒதுக்கப்பட்ட நிதி, மற்றும் பணி நிலவரம் குறித்து பதில் அளிக்க மத்திய கலாச்சாரத்துறை, மற்றும் தமிழக கல்வெட்டியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த 7 ஆயிரம் தலைப்புகள் கொண்ட ஓலைச்சுவடிகள் மரப்பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளதால் அவை சிதைவடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், அவற்றை நவீன டிஜிட்டல் முறையில் பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.