×

மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் 11,12ம் தேதிகளில் விடுமுறை : காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவிப்பு

சென்னை : மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை முதல் 3 நாட்களுக்கு விடுமுறை என்று காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் நாளை மாமல்லபுரத்தில் சந்திப்பதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஜீ ஜின்பிங் சென்னை வருகை


பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜீ ஜின்பிங் 11ம் தேதி (நாளை)  சென்னை வருகிறார். 12ம் தேதியும் மாமல்லபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு தமிழக தலைநகரான சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.  இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பின்போது பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள், தீவிரவாதிகள் ஒழிப்பு குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளனர்.பிரதமர் மோடி, சீன அதிபரின் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு வளையத்திற்குள் மல்லை


இதன் காரணமாக சென்னை தொடங்கி மாமல்லபுரம் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளது. மொத்த மாமல்லபுரமும் புதிய சாலைகளால் ரம்மியாக மாறியுள்ளது.அத்துடன் மாமல்லபுரத்தின் முக்கிய சாலைகள் அனைத்தும் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகளில் தங்குபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் சீன அதிபரின் வருகையொட்டி நாளை மற்றும் நாளை மறு நாள் (அக்டோபர் 11,12ஆம் தேதிகளில்) சென்னையில் முக்கிய சாலைகளில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை விமான நிலையம் அமைந்துள்ள ஜிஎஸ்டி சாலை மற்றும் மகாபலிபுரம் ஓஎம்ஆர்சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

இதன் காரணமாக பள்ளி கல்லூரி பேருந்துகள் செல்வதில் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை முதல் 3 நாட்களுக்கு விடுமுறை என்று காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையன் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு வருகிற 11, 12,13ம் நாளை முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : colleges ,schools ,areas ,vacation ,Kanchipuram Collector ,Mamallapuram Beirutpuram ,Districts ,Mamallapuram ,Kanchipuram Collectorate Announces Holidays , Mamallapuram, Kanchipuram, Collector, Ponnayan, Chinese President, Jinping, Prime Minister Modi
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...