கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டுயானைகள், அங்கிருந்த கடை ஒன்றின் முன்பக்க சுவற்றை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை நாசமாக்கின. கடந்த ஒருமாத காலமாக வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள், அருகாமையில் இருக்கும் தேயிலை தோட்டம் அதனை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து சேதத்தை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தாய்முடி டீ எஸ்டேட் -ன் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள், நள்ளிரவில் 6 காட்டுயானைகள் புகுந்தன.