சீன அதிபர் வருகை: தனியார் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்

சென்னை: சீன அதிபர் வருகையையொட்டி ஓஎம்ஆர் சாலையில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல் என தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜீ ஜின்பிங் 11ம் தேதி (நாளை)  சென்னை வருகிறார். 12ம் தேதியும் மாமல்லபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு தமிழக தலைநகரான சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: