நியூயார்க்: அமெரிக்காவில் எண்ணெய் வளத்துறை தொடர்பான உற்பத்தி மற்றும் சேவையை வழங்குவதில் கல்லீபர்டன் நிறுவனம், உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஹூஸ்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.
இந்நிறுவனத்தின் எண்ணெய் வயலில் பணி புரியும் இந்தியாவை சேர்ந்த மிர் அலி, உதவி ஆபரேட்டராக இருக்கும் சிரியாவை சேர்ந்த ஹசன் சோனுபர் ஆகியோர் கடந்த 2012ம் ஆண்டு முதல், அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களால் தேசத்தின் பெயராலும் மதத்தின் பெயராலும் இழிவுபடுத்தப்பட்டனர்.