சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் அறிக்கை: உலகமே பொருளாதார நெருக்கடிக்குள் ஆழ்ந்து கிடக்கும் நிலையில், ஒரு புதிய பொருளாதார முறைமையை உருவாக்கும் சூழலை இந்தியாவும், சீனாவும் சேர்ந்து ஏற்படுத்த முடியும். இந்த இருநாடுகளின் கூட்டுறவில் ஒரு புதிய உலக முறைமை உருவெடுக்க வேண்டும். பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாட்டுக்கு வருகை தரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு நெஞ்சார வரவேற்கிறது என கூறியுள்ளார்.