கொல்கத்தா: மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று, தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். பல மூத்த தலைவர்கள் சமாதானம் செய்தும் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். அதைத் தொடர்ந்து, சோனியா காந்தி கட்சியின் இடைக்கால தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் நேற்று அளித்த பேட்டியில், ‘தோல்வியால் ராகுல் விலகியதால் கட்சி தள்ளாடுகிறது. எங்கள் பெரிய பிரச்னையே ராகுல் விலகியதுதான். அவர் மீண்டும் தலைவராக வேண்டும்,’ என்றார்.