நெல்லை: களக்காடு பகுதியில் பிரசாரம் செய்து திரும்பிய செய்திதுறை அமைச்சர் பாளை அருகே வரும்போது திடீரென மயக்கமடைந்தார். இதையடுத்து நெல்லை தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் நாராயணனுக்கு ஆதரவாக 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நெல்லையில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று முன்தினம் களக்காடு பகுதியில் பிரசாரம் முடித்து விட்டு இரவு உணவு அருந்திய பின்னர் நெல்லையில் அவர் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். பாளையங்கோட்டை அருகே கொங்கந்தான்பாறை அருகே வரும்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.