சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாயை பிரிந்த குட்டி யானையை மீண்டும் யானைக்கூட்டத்துடன் சேர்க்க முயற்சி

சத்தியமங்கலம். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாயை பிரிந்த பெண் குட்டி யானையை மீண்டும் வனப்பகுதியில் யானைக்கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.  ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் குட்டி யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய விளைநிலத்தில் புகுந்தது. இதையடுத்து வனத்துறையினர் குட்டி  யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு விட்டனர். இந்த நிலையில் குட்டி யானையை மற்ற யானைக்கூட்டம் சேர்க்காததால் மீண்டும் வனப்பகுதியை விட்ட வெளியேறிய குட்டி யானை வனச்சாலையில் சுற்றித்திரிந்தது. வனத்துறையினர்  மீட்டு காராச்சிக்கொரை வன கால்நடை மையத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

இந்த மையத்தில் வனத்துறை கால்நடை மருத்துவக்குழுவினர் குட்டி யானையை பரிசோதித்து தினமும் 15 லிட்டர் பால் கொடுத்து பராமரித்து வந்தனர். பெண் குட்டி யானை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்று  பராமரிக்கப்பட்ட உள்ளதாக வனத்துறையினர் கூறி வந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் வனத்துறையினர் குட்டி யானையை வாகனத்தில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று யானைக்கூட்டத்துடன் சேர்க்க முயற்சி  மேற்கொண்டனர். இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் அருண்லால் கூறியதாவது. பண்ணாரி மற்றும் பவானிசாகர் வனப்பகுதியில் குட்டிகளுடன் சுற்றித்திரியும் யானைக்கூட்டத்தில் இந்த குட்டியானையை  சேர்ப்பதற்கான முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இந்த குட்டியானையை யானைக்கூட்டத்துடன் சேர்த்தபின் குட்டியானையின் நடமாட்டத்தை வனத்துறை ஊழியர்கள் கண்காணிக்கும் பணியை மேற்கொள்வர் என்றார்.

Related Stories: