ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ள பேராசிரியர் நிர்மலா தேவி விசாரணைக்கு ஆஜரான போது மயங்கி விழுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. வழக்கு விசாரணைக்காக பேராசிரியர் நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டம் மகிளா விரைவு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். அப்போது விசாரணை தொடங்கும் நேரத்தில் நீதிபதிகள் முன்பாக திடீரென நிர்மலா தேவி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து உடனடியாக அங்கிருந்தவர்கள் அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்தும், பெண் காவலர்கள் அவரது கைகளை உரசி சூடு ஏற்படுத்தியும், நெஞ்சைத் தடவிக் கொடுத்து இயல்பு நிலைக்குக் கொண்டு வரப் பார்த்தனர்.