மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் ஆட்சி தான் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது: மக்களுக்காக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்... நாங்குநேரியில் ஸ்டாலின் பரப்புரை

நெல்லை: நாங்குநேரி சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது நாங்குநேரி செட்டிக்குளத்தில் திமுக தலைவர் பேசினார். அதில் கூறுவதாவது; ஆளுங்கட்சி சார்பில் குறைகளை கேட்க யாரும் வருவதில்லை என ஸ்டாலின் குற்றம் சாடினார். அனைத்து கிராமங்களுக்கும் சென்று மக்களின் குறைகளை திமுக கேட்டு வருகிறது.

மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் ஆட்சி தான் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் அதிமுக ஆட்சியில் இருப்பதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் தான் விவசாயிகளும், பெண்களும் மேம்பாடு அடைய முடியும். பெண்களின் முன்னேற்றத்திற்கு உழைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். பெண்களின் சுயமறியாதையுடன் வாழ்வதற்காக மகளிர் சுய உதவிக்குழுவை கலைஞர் ஏற்படுத்தினார். அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் முறையாக செயல்படவில்லை. விவசாயிகளுக்கு திமுக ஆட்சியில் இலவச மின்சாரம், ரூ.7,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

தற்போது தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். மக்களுக்காக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் பிரச்சாரத்தின் போது பேசினார். திமுக வெற்றிபெறும் என்ற அச்சத்தில் ஆளும்கட்சி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

Related Stories: