டெல்லி: மதுரையில் தொல்பொருள் ஆய்வகம் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துளோம் என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். கீழடி அகழ்வாராய்ச்சிகள் தொடர வேண்டும் எனவும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார். கீழடி விவகாரத்தை மத ரீதியிலாக கொண்டு போவது தவறானது என்று டெல்லியில் கனிமொழி எம்.பி. பேட்டியளித்துள்ளார்.