உத்தமபாளையம்: உத்தமபாளையம் பகுதியில், வகுப்பறையில் ஆசிரியை ஒருவருடன் ஆசிரியர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் தேனி மாவட்டம் முழுவதும் வாட்ஸ் அப்பில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி உள்ளது. இங்குள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பணியாற்றுகிறார். இதே ஊருக்கு அருகே உள்ள ராமசாமி நாயக்கன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் ஆசிரியை ஒருவர் பணிபுரிகிறார். இவர்கள் இருவருக்கும் சில மாதங்களாக தொடர்பு இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த விஷயம் தெரிந்த ராயப்பன்பட்டி பள்ளி நிர்வாகம் சில நாட்களுக்கு முன் ஆசிரியரை சஸ்பெண்ட் செய்தது.