×

காட்டு யானை தாக்கி ஆதிவாசி பெண் பலி

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சலிவயல் மில்லிகுன்னு ஆதிவாசி கிராமத்தை சேர்ந்தவர் மாதன் மனைவி காளி(70). இவர் நேற்று முன்தினம் மாலை மாயமானார். அவரை தேடியபோது எல்லமலை அருகில் உள்ள காப்பி  தோட்டத்தில் காளியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் காளி யானை தாக்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிந்தது.

Tags : Adivasi , Attacking ,wild elephant, Adivasi woman, kills
× RELATED அடிப்படை வசதிகள் இல்லை நாடாளுமன்ற...