சென்னை: மதுரை ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலை 6 மாதத்தில் நடத்த வேண்டும் என்று முதன்மை தலைமை பொறியாளர் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். பாசனத்தில் விவசாயிகளை பங்கேற்க செய்யும் வகையில் கடந்த 2001ல் தமிழ்நாடு விவசாயிகள் பாசனம் மற்றும் நீர் பங்கீட்டு சட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி விவசாயிகளை கொண்டு நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் நீரினை பகிர்வது, கால்வாய்களை பாதுகாப்பது, உடைப்பை சரி செயதல், விவசாயம் சார்ந்த திட்டங்களை தீட்டுவது, நீர் திறப்பு உள்ளிட்டவை தொடர்பான பணிகளில் இச்சங்கத்தினர் ஈடுபடுவார்கள். கடந்த 2009ம் ஆண்டுக்கு பிறகு நீரினை பயன்படுத்துவோர் சங்கத்திற்கான தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால், விவசாயம் மற்றும் நீர்பங்கீடு சம்பந்தமான பணிகள் கடுமையாக பாதித்துள்ளன. மேலும், தற்போது நடந்து வரும் குடிமராமத்து பணிகளில் இந்த சங்கத்தினரின் பங்கு இல்லாமல் போனது. மாறாக, அரசியல் வாதிகளை கொண்டு இந்த குடிமராமத்து பணியில் நடத்தப்படுவதால் முறைகேடு புகார்கள் தொடர்ந்து வண்ணம் உள்ளன. இந்த நிலையில், நீரினை பயன்படுத்ததுவோருக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்று ராமநாதபுரம் விவசாயிகள் அமைப்பினர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நீரினை பயன்படுத்துவோருக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மதுரை ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலை 6 மாதத்தில் நடத்த வேண்டும்: முதன்மை தலைமை பொறியாளர் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவு
- மதுரை ஐகோர்ட் ஆர்டர்
- தலைமை தலைமை பொறியாளர்
- தேர்தல்
- பிராந்திய தலைமை பொறியாளர்கள்
- நீர் பயனர்கள் சங்கம்
- மதுரை ஐகார்ட்
- நீர் பயனர்களை ஆர்டர் செய்யுங்கள்
- தொழிற்சங்கத் தேர்தல்