பல்லாவரம்: குன்றத்தூர் பகுதியில் குடோனில் பதுக்கிய 6 டன் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 2 பேரை கைது செய்தனர். வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையின் சர்வீஸ் சாலை அருகே குன்றத்தூர் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை மடக்கி போலீசார் விசாரணை செய்தனர்.அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், சந்தேகத்தின் பேரில் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், ஊரப்பாக்கத்தை சேர்ந்த அலிபாபா (52) என்பதும், தடை செய்யப்பட்ட போதை பொருட்களை ஊரப்பாக்கத்தில் உள்ள குடோனில் மொத்தமாக பதுக்கி வைத்து, குன்றத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் தொடர்ந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த குடோனில் போலீசார் சோதனை செய்தபோது, சுமார் 6 டன் எடை கொண்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.
Tags : area ,Kundathoor , 6 tonnes , narcotics ,seized,Kundathoor area