மின்சாரம் பாய்ந்து 2 ஊழியர்கள் காயம்

துரைப்பாக்கம்: பெருங்குடி வெங்கடேஷ்வரா நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் நேற்று முன்தினம் திடீரென மின் தடை ஏற்பட்டதாக, பெருங்குடி மின் வாரிய அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், லைன் ஆய்வாளர் ஏழுமலை (52), வயர்மேன் ஆறுமுகம் (48) ஆகியோர், டிரான்ஸ்பார்மரை நிறுத்திவிட்டு, மேற்கண்ட நிறுவனத்தில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.  அப்போது நிறுவனத்தில் உள்ள ஜெனரேட்டரை யாரோ ஆன் செய்துள்ளனர். இதனால் மின்சாரம் பாய்ந்து இருவரும்  படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: