மலையில் பஸ் மோதி பாக்.கில் 22 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராவல்பிண்டியில் உள்ள ஸ்கார்டு நகரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சிலாஸ் மாவட்டத்தில் மலைப்பாதையில் பேருந்து வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், மலையில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 22 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். மலைப் பகுதியில் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில மணி நேரங்களுக்கு பின் விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: