கொல்கத்தா: மனித குரங்குகள் உட்பட அரிய வகை குரங்குகளை, வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக கொண்டு வந்த கொல்கத்தா நபரிடம் ₹81 லட்சம் மதிப்புள்ள 3 மனித குரங்குகள், 4 தென் அமெரிக்க குரங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சுப்ரதிப் குஹா. இவரிடம் 3 மனித குரங்குகள், 4 தென் அமெரிக்க குரங்குகள் இருந்தன. இவர் மீது மேற்கு வங்க வனத்துறை, அமலாக்கத்துறையிடம் புகார் கொடுத்தது. இதையடுத்து நடந்த விசாரணையில் சுப்ரதிப் குஹா வன விலங்குகளை கடத்தும் தொழிலில் ஈடுபட்டது கண்டறிப்பட்டது.