தமிழகத்தில் தேர்தல் ஆணையம் தோற்று விட்டது. ஏற்கனவே நடந்த தேர்தல்களில் பண வினியோகத்தை தடுக்க முடியவில்லை. மத்திய அரசின் கைப்பாவையாக தேர் தல் ஆணையம் இருக்கிறது.
- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.
காஷ்மீரில் புதிய காற்று வீசுகிறது. நாம் அனைவரும் இணைந்து, அனைவருக்குமான புதிய காஷ்மீரை கட்டமைப்போம்.- பிரதமர் நரேந்திர மோடிபிரியங்கா காந்தியின் கருத்துக்கள் மக்களுடன் ஒத்துப்போகிறது. பாஜ தலைவர்கள் யாருக்காவது பயப்படுகிறார்கள் என்றால், அது பிரியங்கா காந்தியாகத்தான் இருக்கும். - உ.பி. காங்கிரஸ் தலைவர் ராஜ்பாபர்தமிழகத்தை எல்லா வகையிலும் வஞ்சிக்கும் மத்திய பாஜ அரசின் துரோகங்களுக்கு துணைபோகும் எடப்பாடி அரசுக்கு இடைத்தேர்தலில் மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள்.- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ