டிரானா: அல்பேனியா நாட்டில் நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். தலைநகர் டிரனா மற்றும் கடற்கரை நகரமான டுர்ரஸ் ஆகிய இடங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானது என அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. தொடர் நிலநடுக்கங்களால் பல கட்டிடங்கள் சேதமாகின. நிலநடுக்கத்தை உணர்ந்து வீடுகளை விட்டு வெளியே வந்த பொதுமக்கள் , நிலநடுக்கம் தொடர்ந்ததாக தெரிவித்தனர்.