×

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியில்லை: ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கெடுக்காது...கமல்ஹாசன் அறிக்கை

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா, ஹரியானா  சட்டப்பேரவை  தேர்தலுக்கான தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று அறிவித்தார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார், மக்களவை தேர்தலில்  கன்னியாகுமரி  தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பி. ஆனார். இதனால், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியானது. இதேபோல, விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ ராதாமணி கடந்த ஜுன் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார்.

இதனால், இந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். வேட்பு மனு தாக்கல் செப் 23ம் தேதி தொடங்கி செப்.30ம்   முடிவடையும். அக்டோபர் 1ம் தேதியன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற அக்.3ம் தேதி கடைசி நாளாகும். இத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை அக்டோபர் 24ம் தேதியன்று நடைபெறும்   என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே போட்டியில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார். கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை எந்த தேர்தலிலும்  போட்டியில்லை என்று அவர் கூறினார். இந்நிலையில், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். தேர்தல் தொடர்பாக கமல்ஹாசன்  வெளியிட்ட அறிக்கையில்,

பழைய கொள்ளையர் கட்சிகளையும், அதன் கூட்டுப் பங்காளிகளையும், பெருவாரி மக்களின் எண்ணப்படி ஆட்சியிலிருந்து அகற்றி, 2021ல் ஆட்சிப் பொறுப்பினை மக்களிடம் பேராதரவுடன் கைப்பற்றி மக்களாட்சிக்கு வழி வகுக்கும் முனைப்போடு  மக்கள் நீதி மய்யம் கட்சி விரைவாக முன்னேறி வருகிறது. விக்கிரவாண்டியிலு, நாங்குநேரியிலும் தங்கள் தலைவர்களையும் அவர்களின் தலைப்பாதைகளையுமாவது தக்க வைத்துக்கொள்ளலாம் என்கின்ற எண்ணத்துடன்,  ஆட்சியிலிருந்தவர்களும் ஆள்பவர்களும் போடும் இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கெடுக்காது என குறிப்பிட்டுள்ளார்.



Tags : Vikravandi ,Nankuneri ,Kamal Haasan , Nanguneri, Vikravandi contesting by-election: People's justice will not play in corruption drama ... Kamal Haasan Report
× RELATED திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு...