×

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் முன்னாள் போலீஸ் கமிஷனர் சிக்கினால் கொல்லப்படுவார்: மே.வங்க காங்கிரஸ் தலைவர் அச்சம்

கொல்கத்தா: ‘‘சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் ஆவணங்களை அழித்ததாக குற்றம்சாட்டப்படும் கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் பிடிபட்டால் கொல்லப்படலாம்,’’ என மாநில காங்கிரஸ் தலைவர் அச்சம் தெரிவித்துள்ளார். இதுபற்றி மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சிபிஐயால் ராஜிவ் குமார் கைது ெசய்யப்பட்டால் பல முக்கிய தலைவர்கள் பிரச்னைக்கு உள்ளாவார்கள். இந்த வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அமைச்சர்களை சிபிஐ கைது செய்தும் விசாரணை  நடத்தியும் உள்ளது. இந்நிலையில், ராஜிவ் குமார் பிடிபட்டால் அவர் கொல்லப்பட வாய்ப்புள்ளது.இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


Tags : police commissioner ,Saradha ,Maya Congress ,Saratha Sidbund , Saratha Sidbund fraud Former police commissioner killed by embarrassment
× RELATED கஞ்சா விற்ற 40 பேர் கைது