திருவொற்றியூர்: மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் நேற்று பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அப்பகுதியில் மின் பராமரிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். வியாசர்பாடி கல்யாணபுரத்தை சேர்ந்த மின்வாரிய ஊழியர் முருகன் (36) என்பவர், மாத்தூர் எம்எம்டிஏ 2வது பிரதான சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறி, சீரமைப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில், முருகன் மயங்கி டிரான்ஸ்பார்மரிலேயே அந்தரத்தில் தொங்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், முருகனை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனே இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.