திருச்சி: தேனி மருத்துவ கல்லூரியில் ஆள் மாறாட்டம் செய்து சேர்ந்ததுபோல, திருச்சி, நெல்லை அரசு மருத்துவ கல்லூரியிலும் மாணவர்கள் சேர்ந்து உள்ளார்களா என சான்றிதழ்களும், ஹால்டிக்கெட் புகைப்படங்களும் ஆய்வு செய்யப்பட்டன.நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் மாணவன் உதித்சூர்யா சேர்ந்த விவகாரத்தை தொடர்ந்து, இவரை போன்று வேறு யாராவது ஆள்மாறாட்டம் செய்து சேர்ந்துள்ளனரா என்பதை அறிய தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் விசாரணை நடந்து வருகிறது. திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு 150 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். இதில், மாணவர்களின் கல்வி ஆவணங்கள், புகைப்படம், பிற சான்றிதழ்கள் அனைத்தும் நேற்று ஆய்வு செய்யப்பட்டது.