×

வாடகை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து கன்டெய்னர் லாரி ஸ்டிரைக் வாபஸ்

சென்னை: வாடகை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, கடந்த 6 நாட்களாக நடந்து வந்த கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.அதிக அபராதம் விதிக்கப்படுவதால், அதிக பாரம் ஏற்ற மாட்டோம்; கன்டெய்னர் லாரிகளுக்கு உரிய வாடகை நிர்ணயிக்க வேண்டும் எனக்கூறி, கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், கடந்த 16ம் தேதி முதல் வேலைநிறுத்த  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 21 சங்கங்கள் பங்கேற்றன.தற்போது,20 அடி கன்டெய்னருக்கு வழங்கப்படும் ₹2,500 வாடகையை 3,800 ஆகவும் 40 அடி கன்டெய்னருக்கு வழங்கப்படும் ₹3,500ஐ 4,800 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். காலி  கன்டெய்னர் லாரிகளுக்கு வழங்கப்படும் 2,000 வாடகையை, 3,300 ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.இதை நிறைவேற்றினால், வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும் என கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள்  அறிவித்தனர். இதனால் சென்னை துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான கன்டெய்னர்கள் தேங்கியதால் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் பாதிப்புக்குள்ளானது. அரசுக்கு பல கோடி  ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறக்கோரி, தண்டையார்பேட்டை தாசில்தார் லட்சுமி தலைமையில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்களுடன் நேற்று மதியம் பேச்சுவார்த்தை நடந்தது.

இதில், சரக்கு பெட்டக நிலைய அதிகாரிகள், துறைமுகம் உதவி ஆணையர் கொடிலிங்கம், துறைமுகம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.பேச்சுவார்த்தை முடிவில், 20 அடி கன்டெய்னருக்கு வாடகை 2,500 ரூபாயில்  இருந்து 3,500 ரூபாயாகவும், 40 அடி கன்டெய்னருக்கு வாடகை 3,500 ரூபாயில் இருந்து 4,500 ரூபாயாகவும் உயர்த்தி தருவதாக வாக்குறுதி அளித்தனர்.இதையடுத்து, வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக கன்டெய்னர் லாரி உரிமையாளர்  சங்கத்தினர் அறிவித்தனர். இதனை தொடர்ந்து 6 நாள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து கன்டெய்னர் லாரிகள் இயக்கப்படுகின்றன.

வாபசில் குழப்பம்
6 நாட்களாக நடைபெற்ற கன்டெய்னர் லாரிகள் ேவலை நிறுத்த போராட்டம் ேநற்று நடைபெற்ற ேபச்சுவார்த்தையில், ஒரு தரப்பு சங்கத்தினர் உடன்பாடு ஏற்பட்டதாகவும், ஒரு தரப்பு சங்கத்தினர் எழுத்து பூர்வமாக கொடுத்தால் தான் வேலை  நிறுத்தத்தை திரும்ப பெறுவோம் என்று கூறினர். இதனால், ேவலை நிறுத்தம் முழுமையடையாமல் பேச்சுவார்த்தைக்கு பிறகும் கன்டெய்னர் லாரி உரிமையாளர்களிடமே குழப்பம் நிலவுகிறது. இதனால் பாதி கன்டெய்னர்கள் வாபஸ் பெற்றும்  பாதி கன்டெய்னர்கள் வாபஸ் பெறாமலும் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Tags : Larry Strike ,rent hike ,hike ,rent container , hike, rent, Container Larry, Strike ,withdraws
× RELATED “தூத்துக்குடி, நெல்லை நிகழ்ச்சிகளை...