ஜம்மு: காஷ்மீர் மாநிலத்தில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த மேலும் 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளை ஊடுருவ செய்து தாக்குதல் நடத்தி நாட்டின் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் முயன்று வருகிறது. இந்நிலையில், கதுவா மாவட்டத்தில் ஜம்மு - பதான்கோட் நெடுஞ்சாலையில் கடந்த 12ம் தேதி நடந்த வாகன சோதனையில் காஷ்மீரை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.