கதுவா வாகன சோதனை வழக்கில் மேலும் 2 தீவிரவாதிகள் கைது

ஜம்மு: காஷ்மீர் மாநிலத்தில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த மேலும் 2 தீவிரவாதிகள் கைது  செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து  செய்யப்பட்ட பின்னர், எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளை ஊடுருவ செய்து  தாக்குதல் நடத்தி நாட்டின் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் முயன்று  வருகிறது. இந்நிலையில், கதுவா மாவட்டத்தில் ஜம்மு - பதான்கோட்  நெடுஞ்சாலையில் கடந்த 12ம் தேதி நடந்த வாகன சோதனையில் காஷ்மீரை சேர்ந்த  ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம்  நடத்திய விசாரணையின் அடிப்படையில், புல்வாமாவை சேர்ந்த டிரக் உரிமையாளர்  சுசில் அகமது லட்டூ மற்றும் பஷீர் அகமது லோனே ஆகிய ஜெய்ஷ் இ முகமது  தீவிரவாதிகள் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தீவிர விசாரணை  நடத்தப்படுகிறது. இதன் மூலம், மேலும் சில தீவிரவாதிகள் கைது  செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக போலீஸ் அதிகாரிகள்  தெரிவித்தனர்.

Related Stories: