×

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு: காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 16 கால்நடைகள் கொல்லப்பட்டன.காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இம்மாநில எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிறிய ரக ஆயுதங்கள், வெடிகுண்டுகளை பயன்படுத்தி, ரஜோரி, பூஞ்ச் மாவட்ட எல்லை கிராமங்களின் மீதும், இந்திய ராணுவ நிலைகளின் மீதும் தாக்குதல் நடத்தியது. துப்பாக்கிச்சூடும் நடத்தினர். இவற்றுக்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள  பாலகோட் பகுதியில் 16 கால்நடைகள் பலியாகின. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



Tags : Pakistani ,border , Pakistani ,infiltration ,on,border
× RELATED ஆப்கானில் பாக். குண்டு மழை 8 பேர் பலி