சென்னை : சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான குற்றவாளியைக் கைது செய்யாமல் காப்பாற்றி வருவது சட்ட விரோதம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இல்லத் திருமண நிகழ்ச்சிக்காக முதல்வர் மற்றும் துணை முதல்வரை வரவேற்று வைத்திருந்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கு காரணமாக அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இதுவரை கைது செய்யப்படவில்லை.