கடலை பணியாரம்

செய்முறை : முதலில் தேங்காயை முக்கால் பகுதி துருவிக்கொண்டு கால் பகுதியில் பால் எடுக்கவும். பொட்டுக்கடலையை ஒன்றிரண்டாக பொடிக்கவும். சர்க்கரையை தூளாக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து பொடியாக நறுக்கவும். மைதாவில் தேங்காய்ப்பால், உப்பு, 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும். பின் தேங்காய் துருவலுடன் பொட்டுக்கடலை, முந்திரி, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் எல்லாம் சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும். ஒரு மணி நேரம் கழித்து உருண்டைகள் பிடித்து மைதாவில் நனைத்து பொரிக்கவும்.சுவையான கடலை பணியாரம் ரெடி.

Related Stories: