×

மாவட்ட சிலம்பாட்ட போட்டியில் 54 பதக்கங்களை குவித்த மேலூர் மாணவர்கள்

மேலூர்: மதுரையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் மேலூரை சேர்ந்த மாணவர்கள் 10 தங்கம் உட்பட 54 பதக்கங்களை வென்று அசத்தினர். மதுரை மாவட்ட சிலம்பாட்ட அசோசியேஷன் சார்பில் மாவட்ட சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி மதுரையில் நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில் மேலூர் போதிதர்மா தற்காப்பு கலைப்பள்ளியின் அங்கமான இந்தியன் சிலம்பம் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவியர் 67 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பயிற்சியாளர் செந்தில் என்ற போஜராஜன் பயிற்சி அளித்திருந்தார். தமிழ்நாடு மாநில சிலம்பாட்ட அசோசியேஷன் தலைவர் ராஜேந்திரன் ஐஏஎஸ் தலைமையில் மதுரை மாவட்ட சிலம்பாட்ட அசோசியேஷன் செயலாளர் மணி, பொருளாளர் கணேசன் முன்னிலையில் போட்டி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மதுரை எம்பி வெங்கடேசன், பெரிஸ் மகேந்திரன் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.

இதில் மேலூரை சேர்ந்த பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் கபில், வெற்றி, தருண், சக்தி, ராம்கிஷோர், ரஞ்சனா, பிரித்தியங்கரா தேவி, சாய் ஆகாஷ், அமீர்ஜஹான் மதார், சுமன் ஆகிய 10 பேர் தங்க பதக்கங்களை வென்றனர். 21 மாணவர்கள் வெள்ளி பதக்கங்களையும், 23 மாணவர்கள் வெங்கல பதக்கங்களையும் வென்றனர். கலந்து கொண்ட 67 பேரில் 54 பதக்கங்களை வென்று மேலூர் மாணவர்கள் அசத்தினர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சியாளர் செந்தில் ஆகியோரை பள்ளி தாளாளர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் பாராட்டினர்.

Tags : Melur , Medal, students
× RELATED தனுஷுக்கு எதிரான மனு தள்ளுபடி