கோவில்பட்டி: மனைவியை அழைத்துச் சென்ற சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கவும், அவரிடம் இருந்து மனைவியை மீட்டு தரக்கோரியும் கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முன்பு கட்டிட தொழிலாளி திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மும்மலைப்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (47), கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி ராமலட்சுமி (38). 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை பாலசுப்பிரமணியன் கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர், திடீரென ஆர்டிஓ அலுவலகம் வாசல் முன்பு அமர்ந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து, திடீர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.