குறை பிரசவத்தில் பிறந்த குட்டி யானை சாவு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த கோபால்சாமி மலை அடிவாரப் பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. அதிலும் கோபால்சாமி மலையடிவாரம் அருகே உள்ளஅடர்ந்த வனத்தில் கடந்த சில நாட்களாக நிறைமாதகர்ப்பிணி யானை உலா வந்துள்ளது. நேற்று முன்தினம் அந்த யானைசத்தம் போட்டபடி அங்கும் இங்குமாக ஓடியது. திடீரென அந்த யானை ஆண் குட்டியை ஈன்றது. குறைப்பிரசவத்தில் பிறந்த குட்டி யானை சிறிது நேரத்தில் இறந்தது.

இதையறிந்த வனச்சரகர் காசிலிங்கம் மற்றும் வன குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.  பின், வேட்டைக்காரன்புதூர் கால்நடை உதவி இயக்குனர் முன்னிலையில், இறந்த குட்டி யானையை பிரேத பரிசோதனை செய்ய தயாராகினர். ஆனால், அந்த குட்டி யானையை சுற்றிலும் தாய் யானை மற்றும் சில யானைகள் ஆங்காங்கே சுற்றி சுற்றி வந்தது.

இதனால் பிரேத பரிசோதனை செய்வதில் தாமதமானது . யானைகள் அனைத்தும் பட்டாசு வெடித்து விரட்டப்பட்டது . அதன் பிறகு குட்டி யானை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது . பிரேத பரிசோதனை செய்யப்பட்ட குட்டி யானையின் உடல் பிற விலங்குகளுக்கு உணவாக விடப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: