நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே உள்ள வரகூரில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த 2 வயது குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வரக்கூர் பரமத்தி சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் 6 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. இந்த கார் ஓட்டுநர் தனக்கு முன்பு சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்த முயன்ற பொது, எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இந்த பயங்கர விபத்தில் காரில் பயணித்த ஓட்டுநர் ராஜேந்திரன் மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சரவணன், கேசவன், ராஜ், 2 வயது ஆண் குழந்தை பிரிஜின், கந்தம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.