முகலிவாக்கம் விபத்துக்கு மின் வாரியம் பொறுப்பு அல்ல, நகராட்சி நிர்வாகமே பொறுப்பு : அமைச்சர் தங்கமணி பேட்டி

சென்னை : முகலிவாக்கத்தில் யாரோ பள்ளம் தோண்டியதால் வயர் வெளியே வந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முகலிவாக்கம் விபத்துக்கு மின் வாரியம் பொறுப்பு அல்ல, நகராட்சி நிர்வாகமே பொறுப்பு என்றும் அமைச்சர் தங்கமணி பேட்டியில் தெரிவித்துள்ளார். மாநகராட்சியோ, மின்சார வாரியமோ யார் காரணமாக இருந்தாலும் மின்சார விபத்து வருந்தத்தக்க விஷயம் என்றும் முகலிவாக்கம், சிட்லபாக்கம் மின் விபத்துகளை போன்று இனி நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்றும் நாமக்கல்லில் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Related Stories: