விழுப்புரம் : அரசு கலைக்கல்லூரி கல்விக்கட்டண உயர்வு ரத்து குறித்து வரும் திங்கட்கிழமை முடிவு எடுக்கப்படும் என்று விழுப்புரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டியளித்தார். அப்போது திருவள்ளூர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் தேர்வுக் கட்டணம் உயர்த்தியது பற்றி வருகிற 23ம் தேதி பல்கலை. துணைவேந்தருடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.