விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கணேஷ்குமார் (19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது நண்பர்களான அதே ஊரைச் சேர்ந்த 3 வாலிபர்கள் சென்னையில் கடைகளில் வேலை பார்த்து வந்தனர். லீவில் ஊருக்கு வருபவர்கள் நண்பருடன் ஜாலியாக பொழுதை கழித்துவிட்டு சென்னை திரும்புவர். இந்நிலையில் கணேஷ்குமார் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை ஓராண்டாக காதலித்து வந்தனர். இதையறிந்த பெற்றோர் மகளை கண்டித்ததுடன், வேலைக்கு போக வேண்டாம் என்று தடுத்து விட்டனர். இதையறிந்த நண்பர் உன் காதல்தான் பாதியில் முறிந்து விட்டது. நான் அந்த பெண்ணை காதலிக்கிறேன் என்றார். இதைக்கேட்ட கணேஷ்குமார் அவள் உனக்கு வேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளார். ஆனாலும் அவர்களது பழக்கம் தொடர்ந்தது. திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியதையடுத்து இருவரும் அடிக்கடி போனிலும் தனிமையிலும் சந்தித்து பேசி வந்துள்ளார்.