சென்னை : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் ஹவுரா விரைவு ரயிலில் வந்த பயணியிடம் இருந்து 36 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வந்த ஆந்திராவின் பாண்டிபூர்ண சந்திரா, கம்பம் வனராஜ், ஒடிசாவின் துர்சன் என்பவரை போலீசார் கைதுசெய்து , அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.