சென்னை: சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை, இணை இயக்குநராக பதவி உயர்வு செய்து, பள்ளிக் கல்வி துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த ராஜேந்திரன் கடந்த மாதம் அங்கிருந்து மாற்றப்பட்டு, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றார். தற்போது ஒரு மாதம் கடந்த நிலையில், அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் நேற்று வெளியிட்டுள்ளார்.